Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு.மார்ச்.31: நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பைஇன்று காலை ஈரோடு பொதுமக்களைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது, வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கோரிக்கைள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது பொது மக்களில் சிலர் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.நடந்து சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உழவர் சந்தை வியாபாரிகள், சந்தைக்கு வந்திருந்த பொதுமக்கள், கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தைக்கு வந்திருந்த பொது மக்களில், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் இளம் பெண்கள், இளைஞர்கள் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், குமாரவலசு பகுதியில் உள்ள, மறைந்த ஈரோடு எம்பி கணேசமூர்த்தியின், வீட்டுக்குச் சென்றார். கணேசமூர்த்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.